2வது முறையாக 18 வயது மாணவியை மயக்கி கடத்திச் சென்ற 50 வயது ஆசிரியர்

மாணவியை ஏமாற்றி கடத்திச் சென்ற ஆசிரியரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2018-11-22 10:51 GMT
ராஜ்கோட்,

குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் நகரை சேர்ந்தவர் தவல் திரிவேதி (50). பள்ளிக்கூட ஆசிரியரான இவர் ஆறு மாதங்களுக்கு முன்னர் மாணவி ஒருவரை ஏமாற்றி கடத்திச் சென்றார். பின்னர் போலீசார் திரிவேதியை கைது செய்தனர். இதையடுத்து பரோலில் வெளியில் வந்த திரிவேதி கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி 18 வயதான நிதி கக்கார் என்ற வேறு மாணவியை மயக்கி அவருடன் ஓடியுள்ளார்.

இதன் பின்னர் போலீசார் அவர்களை தேடியும் இன்னும் கிடைக்கவில்லை. இதன் காரணமாக மாணவி நிதி கக்காரின் பெற்றோர் அதிர்ச்சியிலும், சோகத்திலும் உறைந்துள்ளனர். இந்நிலையில் தனது மகளையும், திரிவேதியையும் கண்டுபிடித்து கொடுத்தால் ரூ. 1 லட்சம் சன்மானம் கொடுக்கப்படும் என வீதி வீதியாக மாணவியின் பெற்றோர் போஸ்டர் அடித்து வருகிறார்கள். திரிவேதி அடிக்கடி தனது இருப்பிடத்தை மாற்றுவதால் அவரை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்