கற்பழிப்பில் பாதிக்கப்பட்டோரின் பெயர், அடையாளங்களை வெளியிட கூடாது; ஊடகங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

கற்பழிப்பில் பாதிக்கப்பட்டோரின் பெயர் மற்றும் அடையாளங்களை வெளியிட கூடாது என ஊடகங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு இன்று உத்தரவிட்டு உள்ளது.

Update: 2018-12-11 06:30 GMT
புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி மதன் பி. லோகுர் தலைமையிலான அமர்வு இன்று வெளியிட்டுள்ள உத்தரவொன்றில், கற்பழிப்பு மற்றும் பாலியல் துன்புறுத்தல்களில் பாதிக்கப்பட்டோரின் பெயர் மற்றும் அடையாளங்களை அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் வெளியிட கூடாது என தெரிவித்து உள்ளது.

இதேபோன்று கற்பழிப்பு மற்றும் பாலியல் துன்புறுத்தல் வழக்குகளில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யும்பொழுது சிறுவர்கள் உள்பட குற்றவாளிகளின் பெயர்களை வெளிப்படையாக போலீசார் பதிவிட கூடாது என தெரிவித்துள்ளது.

சமூகத்தில் கற்பழிப்பில் பாதிக்கப்பட்டோர் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படுவது துரதிருஷ்டவசம் வாய்ந்தது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்