திருநங்கைகள் அரசியலுக்கு வரவேண்டும்; அப்சரா பேட்டி

திருநங்கைகள் அரசியலுக்கு வரவேண்டும் என அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொது செயலாளர் அப்சரா கூறியுள்ளார்.

Update: 2019-02-05 15:01 GMT
புதுச்சேரி,

பத்திரிகையாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பணியாற்றிய அனுபவமுள்ளவர் அப்சரா ரெட்டி.  திருநங்கையான இவர் முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க.வில் தன்னை இணைத்து கொண்டார்.

அதன்பின் அக்கட்சியில் இருந்து விலகி, கடந்த ஜனவரியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.  இதனை தொடர்ந்து அவர் காங்கிரஸ் கட்சியின் தேசிய மகளிர் அணி பொதுச்செயலாளராக ராகுல் காந்தியால் நியமனம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், புதுச்சேரியில் முதல் அமைச்சர் நாராயணசாமியை அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொது செயலாளர் அப்சரா மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருநங்கைகள் அரசியலுக்கு வரவேண்டும்.  அவர்களுக்கு அரசியல் கட்சிகள் வாய்ப்பளிக்க வேண்டும் என்று கூறினார்.

மேலும் செய்திகள்