மனோகர் பாரிக்கர் மறைவுக்கு மத்திய மந்திரிசபை இரங்கல்

மனோகர் பாரிக்கர் மறைவுக்கு மத்திய மந்திரிசபை கூட்டத்தில் இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2019-03-18 22:15 GMT

புதுடெல்லி, 

முன்னாள் ராணுவ மந்திரியும், கோவா முதல்–மந்திரியுமான மனோகர் பாரிக்கர் மறைவையொட்டி நேற்று மத்திய மந்திரிசபை கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. இதில், 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து மனோகர் பாரிக்கருக்கு இரங்கல் தெரிவித்து ஒரு தீர்மானமும், நாடு முழுவதும் ஒரு நாள் தேசிய துக்கம் அணுசரிப்பது என்று ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

மேலும் செய்திகள்