நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் முதல் நபராக ஓட்டு போட்டார்

நாடாளுமன்ற முதல்கட்ட தேர்தல் நடைபெற்ற 91 தொகுதிகளில் மராட்டிய மாநிலத்தில் உள்ள 7 தொகுதிகளும் அடங்கும்.

Update: 2019-04-11 21:26 GMT

நாக்பூர், 

நாக்பூர் தொகுதியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், முதல் நபராக ஓட்டு போட்டார். ஓட்டுப்பதிவு தொடங்குவதற்கு முன்பே, காலை 6.50 மணிக்கு அவர் ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் பையாஜி ஜோஷியுடன் வந்தார்.

காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கும்வரை காத்திருந்து, பின்னர் வாக்களித்தார்.

நிருபர்களிடம் பேசுகையில், மக்கள் பெருமளவில் திரண்டு வந்து வாக்களிக்க வேண்டும் என்று மோகன் பகவத் கேட்டுக்கொண்டார். நாக்பூர் தொகுதியில், மத்திய மந்திரி நிதின் கட்காரி போட்டியிடுகிறார்.

மேலும் செய்திகள்