காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்: சப்-இன்ஸ்பெக்டர் படுகாயம்

காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

Update: 2019-05-19 21:30 GMT
ஜம்மு,

காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா காதி பிரிவில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய வீரர்கள் பதிலடி கொடுத்தனர்.

பாகிஸ்தான் ராணுவத்தினர் குண்டுவீசி தாக்கியதில், எல்லை பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் சத்யபால் சிங் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு ராஜோரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்