மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம், பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள் - பிரியங்கா காந்தி

மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம், பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள் என பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

Update: 2019-05-23 12:52 GMT
பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 345 தொகுதிகளில் முன்னிலைப் பெற்றுள்ளது. அக்கூட்டணியே மத்தியில் மீண்டும் ஆட்சியை அமைக்கிறது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பேசுகையில், நாங்கள் மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதா தொண்டர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்