நிலச்சரிவால் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது
காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2 நாட்களாக பெய்து வந்த கனமழையால் ராம்பன் மாவட்டம் பேட்டரி சேஷ்மா பகுதியில் நேற்று அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டது.
ஸ்ரீநகர்,
ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது. ஆயிரக்கணக்கான வாகனங்கள் இரு நகரங்களுக்கு இடையே ஆங்காங்கே நடுவழியில் நிற்கின்றன. மீட்புப் பணிகள் முடியும் வரை அந்த பகுதியில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மீட்புப் பணியில் எந்திரங்களும், கூடுதல் பணியாளர்களும் ஈடுபட்டுள்ளனர். விரைவில் சீரமைப்பு பணி முடிவடைந்து அந்த பகுதியில் வாகனங்கள் அனுமதிக்கப்படும் என போக்குவரத்து போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.