ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கி சூடு; இந்தியா பதிலடி

ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய துப்பாக்கி சூடு தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது.

Update: 2019-05-28 16:47 GMT
ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் நவ்ஷெரா பிரிவில் பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்தத்தினை மீறி இந்திய எல்லை பகுதிக்குள் முகாம்கள் மற்றும் கிராமங்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியது.

இதனை தொடர்ந்து இந்திய ராணுவம் பாகிஸ்தான் படையினருக்கு பதிலடி கொடுத்தது.  பாகிஸ்தான் அரசு ஒருபுறம் அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்து வரும் நிலையில் அந்நாட்டு ராணுவம் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது.

மேலும் செய்திகள்