அமித்ஷா, ரவிஷங்கர் பிரசாத், கனிமொழி : மாநிலங்களவை எம்.பி. பதவி ராஜினாமா

அமித்ஷா, ரவிஷங்கர் பிரசாத், கனிமொழி ஆகியோர் தங்களது மாநிலங்களவை எம்.பி பதவியை ராஜினாமா செய்தனர்.

Update: 2019-05-29 09:49 GMT
புதுடெல்லி,

மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து தங்களது மாநிலங்களவை எம்.பி. பதவியை அமித்ஷா, ரவிஷங்கர் பிரசாத், கனிமொழி ஆகியோர் ராஜினாமா செய்தனர். இவர்களது ராஜினாமாவை மாநிலங்களவை செயலகம் ஏற்றுக் கொண்டது. 

அமித்ஷா குஜராத் மாநிலம் காந்திநகர் மக்களவை தொகுதியில் இருந்தும், ரவிஷங்கர் பிரசாத் பீகார் மாநிலம் பாட்னா சாகிப் தொகுதியில் இருந்தும், திமுகவை சேர்ந்த கனிமொழி தூத்துக்குடி மக்களவை தொகுதியில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்