‘ஜி–20’ மாநாடு: மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பங்கேற்கிறார்

ஜப்பானில் நடைபெற உள்ள ஜி20 நாடுகளின் நிதி மந்திரிகளின் மாநாட்டில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பங்கேற்க உள்ளார்.

Update: 2019-06-05 14:48 GMT
புதுடெல்லி,

ஜப்பானில் உள்ள ஒசாகா நகரத்தில்  ‘ஜி–20’  நிதி அமைச்சர்கள் மாநாடு ஜூன் 8 மற்றும் 9ஆம் தேதிகளில்  நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க  பிரதமர் மோடி தலைமையிலான புதிய மத்திய அமைச்சரவையில் நிதி அமைச்சராகியுள்ள நிர்மலா சீதாராமன் கலந்து கொள்கிறார். அவருடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாசும் மாநாட்டில் பங்கேற்க உள்ளார். நிதி மந்திரியாக பதிவியேற்ற பிறகு நிர்மலா சீதாராமன் பங்கேற்கும் முதல் சர்வேதச நிகழ்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்