இமாசல பிரதேசத்தில் பேருந்து விபத்து; பிரதமர் மோடி இரங்கல்

இமாசல பிரதேசத்தில் பேருந்து விபத்தில் பலியானோருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Update: 2019-06-20 15:34 GMT
புதுடெல்லி,

இமாசல பிரதேசத்தின் குல்லு நகரில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று திடீரென பள்ளத்திற்குள் விழுந்தது.  இந்த விபத்தில் 27 பேர் பலியாகி உள்ளனர்.  பலர் காயமடைந்தனர்.  அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

பிரதமர் மோடி இதுபற்றி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இமாசல பிரதேச பேருந்து விபத்து பற்றி அறிந்து ஆழ்ந்த வருத்தமடைந்து உள்ளேன்.  உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள்.  காயமுற்றோர் மிகவிரைவில் நலமடைந்து திரும்புவர் என நம்பிக்கை கொண்டுள்ளேன்.  தேவையான சாத்தியமிக்க அனைத்து உதவிகளையும் இமாசல பிரதேச அரசு வழங்கும் என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்