காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை
ஜம்மு மற்றும் காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.
ஜம்மு,
ஜம்மு மற்றும் காஷ்மீரில் சோபியான் நகரில் கீகம் பகுதியில் தரம்தோரா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த தகவலை அடுத்து பாதுகாப்பு படை அங்கு சென்றது.
இந்த நிலையில், பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டுக்கு படையினரும் பதிலடி கொடுத்தனர். இதில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.