வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக பணம் : சுப்ரீம் கோர்ட் மூத்த வழக்கறிஞர்கள் வீட்டில் சிபிஐ சோதனை

வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக பணம் பெற்ற புகாரில் சுப்ரீம் கோர்ட் மூத்த வழக்கறிஞர்கள் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர்.

Update: 2019-07-11 05:23 GMT
புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட் மூத்த வழக்கறிஞர்கள் இந்திரா ஜெய்சிங், ஆனந்த் க்ரோவர் வீட்டில் சிபிஐ ரெய்டு நடைபெற்று வருகிறது. டெல்லி, மும்பையில் உள்ள 2 பேரின் வீடுகள், அலுவலகங்களில் சிபிஐ சோதனையை நடத்தி வருகிறது. வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக பணம் பெற்ற புகாரில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர்.

மேலும் செய்திகள்