ஜம்மு காஷ்மீர்: எல்லையில் அத்துமீறி நுழைந்த நபர் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் உள்ள சர்வதேச எல்லையில் அத்துமீறிய நபர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

Update: 2019-07-15 08:30 GMT
ஜம்மு,

ஜம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் இடையேயான சர்வதேச எல்லை உள்ளது. இந்த எல்லையை தாண்டி அத்துமீறி பாகிஸ்தான் பகுதியில் இருந்து இந்தியாவுக்குள் ஒருவர் ஊடுருவ முயன்றார்.  

பாதுகாப்பு படையினரின்  எச்சரிக்கையையும் மீறி அத்துமீறியதால், பாதுகாப்பு படையினர் அவரை சுட்டுக்கொன்றனர். அதிகாலை 3 மணிக்கு இந்த சம்பவம் நடைபெற்றது.  சுட்டுக்கொல்லப்பட்ட நபரின் அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. 

மேலும் செய்திகள்