திருப்பதி கோவிலில் ரூ.1 கோடி காணிக்கை செலுத்திய பக்தர்

திருப்பதி கோவிலில், பக்தர் ஒருவர் ரூ.1 கோடி காணிக்கை செலுத்தினார்.

Update: 2019-07-17 20:30 GMT
திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் காணிக்கையாக பணம், நகைகளை செலுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் ஜஸ்தி சாம்பசிவா என்ற பக்தர் ரூ.1 கோடியை கோவிலுக்கு காணிக்கையாக வழங்கி உள்ளார். இதற்கான வங்கி வரைவோலையை கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டியிடம் அவர் வழங்கினார்.

மேலும் செய்திகள்