பிரதமர் மோடியின் தனிச் செயலாளராக ஐ.எப்.எஸ் அதிகாரி விவேக் குமாா் நியமனம்

பிரதமர் மோடியின் தனிச் செயலாளராக இந்திய வெளியுறவு பணி அதிகாரி (ஐ.எப்.எஸ்) விவேக் குமாா் இன்று நியமிக்கப்பட்டார்.

Update: 2019-07-19 17:47 GMT
புதுடெல்லி,

பிரதமர் தலைமையிலான அமைச்சரவையின் நியமனக் குழு, பிரதமர்  அலுவலகத்தில் இயக்குநராகப் பணியாற்றி வரும் விவேக் குமாரை பிரதமரின் தனிச் செயலாளராக தேர்வு செய்துள்ளது. விவேக் குமார், கடந்த 2004-ம் ஆண்டு பிரிவான இந்திய அயலகப் பணித்துறையின் அதிகாரியாக தேர்வானவர்.

விவேக் குமாா் பதவியேற்கும் நாளில் இருந்து அடுத்த அறிவிப்பு வரும் வரை அவா் அந்தப் பொறுப்பில் தொடா்வாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்