மும்பை போலீசை கேலி செய்து டிக்-டாக் வீடியோ வெளியிட்ட இந்தி நடிகர் கைது

மும்பை போலீசை கேலி செய்து டிக்-டாக் வீடியோ வெளியிட்ட இந்தி நடிகர் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-07-19 20:00 GMT
மும்பை,

ஜார்கண்ட் மாநிலத்தில் தப்ரேஷ் அன்சாரி என்ற இஸ்லாமிய வாலிபர் கொல்லப்பட்டதை மையப்படுத்தி டிக்-டாக் வீடியோ வெளியிட்ட சிலர் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்தி நடிகர் அஜாஸ் கான் மும்பை போலீசை கேலி செய்யும் விதமாக ஒரு டிக்-டாக் வீடியோவை வெளியிட்டு உள்ளார். இது தொடர்பாக போலீசார் நடிகர் அஜாஸ் கான் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

மேலும் செய்திகள்