மத்திய பிரதேச முன்னாள் முதல் மந்திரி பாபுலால் கவுர் காலமானார்

மத்திய பிரதேச முன்னாள் முதல் மந்திரி பாபுலால் கவுர் இன்று காலை காலமானார்.

Update: 2019-08-21 02:35 GMT
மத்திய பிரதேச முன்னாள் முதல் மந்திரி பாபுலால் கவுர் இன்று காலை காலமானார்.  அவருக்கு வயது 89.  பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான அவர் கடந்த 2004ம் ஆண்டு ஆகஸ்டில் இருந்து 2005ம் ஆண்டு நவம்பர் வரை முதல் மந்திரியாக பதவி வகித்தவர்.

கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்த அவர் கடந்த 7ந்தேதி போபால் நகரில் உள்ள நர்மதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை அவர் காலமானார்.

கடந்த 2018ம் ஆண்டு வயது முதிர்வால் அரசியலில் இருந்து அவர் ஓய்வு பெற்றார்.

மேலும் செய்திகள்