சந்திரயான் 2 நிலவின் சுற்று வட்டப்பாதையில் 3-ஆவது நிலைக்கு முன்னேறி உள்ளது
சந்திரயான் 2 நிலவின் சுற்று வட்டப்பாதையில் 3-ஆவது நிலைக்கு முன்னேறி உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
ஸ்ரீஹரிகோட்டா,
நிலவை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் வடிவமைக்கப்பட்ட சந்திரயான் 2 விண்கலம், கடந்த ஜூலை 22 ஆம் தேதி ஜி.எஸ்.எல்.வி. மார்க் III ஏவுகலன் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. பூமியின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வந்து கொண்டிருந்த சந்திரயான் 2 விண்கலமானது, ஆகஸ்ட் 14 ஆம் தேதியன்று பூமியின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து விலகி நிலவை நோக்கி நேர்கோட்டில் பயணிக்கத் துவங்கியது.
ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவர் என மூன்று நிலைகளை கொண்ட இந்த விண்கலம், ஆகஸ்ட் 20-ல் நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்து நிலவைச் சுற்றி வருகிறது. இந்த நிலையில், சந்திரயான் 2 விண்கலம் நிலவின் 3-வது நிலைக்கு முன்னேறியுள்ளது. 4 கட்டம் உள்ள நிலையில், 3வது கட்டத்தை சந்திரயான் 2 வெற்றிகரமாக எட்டியுள்ளது.
#ISRO
— ISRO (@isro) August 28, 2019
Third Lunar bound orbit maneuver for Chandrayaan-2 spacecraft was performed successfully today (August 28, 2019) at 0904 hrs IST.
For details please visit https://t.co/EZPlOSLap8pic.twitter.com/x1DYGPPszw
சுற்றுவட்டப் பாதையின் விட்டம் படிப்படியாக குறைக்கப்பட்டு இறுதியாக செப்டம்பர் 7 ஆம் தேதி நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.