“ஏ.பி.சி.” தலைவராக மதுகர் காமத் தேர்வு

“ஏ.பி.சி.” தலைவராக மதுகர் காமத் தேர்வு செய்யப்பட்டார்.

Update: 2019-09-20 20:17 GMT
மும்பை,

இந்தியாவில் உள்ள பத்திரிக்கைகளின் விற்பனையை தணிக்கை செய்து, சான்றிதழ் வழங்கும் நிறுவனம் “ஏ.பி.சி.” என்று அழைக்கப்படும் “ஆடிட் பீரோ ஆப் சர்குலேஷன்ஸ்”.

இந்த நிறுவனத்தின் 2019-20-ம் ஆண்டுக்கான தலைவர் தேர்தல் நேற்று நடைபெற்றது. தலைவராக மதுகர் காமத் (முத்ரா விளம்பர ஏஜென்சி) ஒருமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டார்.

தேவேந்திர தார்தா(லோக்மத்) துணைத்தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டார். பொதுச்செயலாளராக எச்.பி.மசானி தொடர்ந்து நீடிப்பார்.

மேலும் செய்திகள்