கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர் டிகே சிவக்குமார் மருத்துவமனையில் அனுமதி

கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர் டிகே சிவக்குமார் மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார்.

Update: 2019-11-12 02:39 GMT
பெங்களூரு,

கர்நாடக முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான டிகே சிவக்குமார் நெஞ்சுவலி காரணமாக நேற்று இரவு பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

முன்னதாக,  சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட டிகே சிவக்குமார், கடந்த செப்டம்பர் 3 ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவர், திகார் சிறையில் அடைக்கப்பட்டார். 51 நாட்கள் சிறையில் இருந்த அவர், கடந்த மாதம் 24 ஆம் தேதி ஜாமினில் விடுதலை செய்யப்பட்டது கவனிக்கத்தக்கது. 

மேலும் செய்திகள்