ஜம்மு-காஷ்மீரில் குண்டு வெடிப்பு: ராணுவ வீரர் பலி
ஜம்மு-காஷ்மீரில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
ஸ்ரீநகர்,
ஜம்மு-காஷீரில் உள்ள அக்னூர் மாவட்டத்தில் இன்று இந்திய ராணுவ வீரர்கள் ராணுவ வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது.
இதில் அந்த வாகனத்தில் பயணம் செய்த மூன்று ராணுவ வீரர்கள் பலத்த காயமடைந்தனர். அவர்கள் மூவரும் உத்தம்பூரில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
காயமடைந்தவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்ற இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக இந்திய ராணுவத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.