நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தினர்.

Update: 2024-04-30 02:30 GMT

நாகை,

நாகப்பட்டினம் செருதூர் கிராம மீனவர்கள் பைபர் படகில் கோடியக்கரையில் இருந்து 15 நாட்டிகல் தென்கிழக்கே கடலில் நேற்று இரவு மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் இரும்பு கம்பி, கட்டையால் மீனவர்களை கடுமையாக தாக்கினர். மீனவர்களிடமிருந்து ஜிபிஎஸ் கருவி, வாக்கி டாக்கி மற்றும் வலை உள்ளிட்ட 2 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.

கடற்கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலில் முருகன் என்பவர் காயமடைந்தார். இதையடுத்து, அவரை மீட்ட சக மீனவர்கள் முருகனை நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்