ப.சிதம்பரத்தை ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி நாளை சந்திக்கின்றனர்
டெல்லி திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி நாளை சந்திக்கின்றனர்.
புதுடெல்லி,
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை காங்கிரஸ் கட்சி எம்.பி., ராகுல்காந்தி, பிரியங்காகாந்தி ஆகியோர் நாளை நேரில் சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ப.சிதம்பரத்தின் நீதிமன்றக் காவல் நாளையுடன் நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.