ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 7 பேர் டெல்லி விமான நிலையத்தில் கைது

போதைப் பொருட்களை கடத்தியதற்காக ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 7 பேர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2019-11-27 08:10 GMT
புதுடெல்லி,

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த 7 பயணிகள் தங்களுடன் போதைப் பொருட்களை எடுத்து வந்தது  கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களிடம் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவர்கள் 7 பேரும் 1,957 கிராம் எடை கொண்ட 214 போதை மாத்திரைகளை விழுங்கி கடத்திச் செல்ல முயற்சி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த போதை மாத்திரைகளின் மொத்த மதிப்பு 9 கோடியே 78 ஆயிரத்து 50 ஆயிரம் ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களிடம் இருந்த போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். தற்போது அந்த 7 பேரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்