துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை

சத்தீஷ்கார் மாநிலத்தில், துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2019-12-09 20:47 GMT
ராய்ப்பூர்,

சத்தீஷ்கார் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் உள்ள மத்திய ஆயுதப்படையில் போலீஸ்காரராக வினீத் நர்வால் (வயது 22) என்பவர் வேலை செய்தார்.

நேற்று அவர் உள்பட 22 போலீஸ்காரர்கள், விடுப்பு முடிந்து அண்டை மாவட்டமான பிஜப்பூரில் பணியாற்றுவதற்காக ஒரு வாகனத்தில் சென்றனர். கீதம் என்ற பகுதியில் அவர்கள் டீ குடிப்பதற்காக இறங்கினர்.

அப்போது வினீத் நர்வால், கையில் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டார். உடனடியாக அவரை அருகில் உள்ள சமூக சுகாதார மையத்தில் சேர்த்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்