பாரதியார் சமூக சீர்திருத்தத்திற்கு எடுத்துக்காட்டு ; பிரதமர் மோடி தமிழில் டுவிட்
பாரதியின் பிறந்தநாளன்று அவரை நினைவு கூர்கிறேன் என்று பிரதமர் மோடி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
புதுடெல்லி,
மகாகவி பாரதியாரின் 138 -வது பிறந்த நாளான இன்று, அவரை நினைவு கூர்ந்து பிரதமர் மோடி தமிழில் டுவிட் செய்துள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:- மகாகவி பாரதியார் என்றழைக்கப்படும் மாமனிதர் சுப்பிரமணிய பாரதியின் பிறந்தநாளன்று அவரை நினைவு கூர்கிறேன். தேசப்பற்று, சமூக சீர்திருத்தம், கவிப்புலமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர். அவரது எண்ணங்களும் பணிகளும் இன்றைக்கும் நம்மை எழுச்சியூட்டும் விதமாகவே உள்ளன.
சுப்பிரமணிய பாரதி, நீதி சமத்துவம் ஆகியவற்றை மற்ற எவற்றிற்கும் மேலாக நம்பினார். 'தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்று ஒருமுறை சொன்னார். மனிதனின் அவதியை போக்கி அதிகாரமளிக்க அவர் கொண்டிருந்த பார்வையை இது ஒன்றே விளக்குகிறது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.