கேரளாவில் மீண்டும் சம்பவம்: பள்ளி மைதானத்தில் மாணவனை பாம்பு கடித்தது
கேரளாவில் பள்ளி மைதானத்தில் மாணவன் ஒருவனை பாம்பு கடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வயநாடு,
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் சமீபத்தில் சர்வஜன மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறையிலேயே பாம்பு கடித்து 5-ம் வகுப்பு மாணவி இறந்தார். இது மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து அனைத்து பள்ளிகளிலும் மிகப்பெரிய அளவில் தூய்மைப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் சுல்தான் பதேரி பகுதியில் உள்ள பீனாச்சி அரசு பள்ளி மைதானத்தில் 2-ம் வகுப்பு மாணவன் முகமது ரைஹானை ஒரு பாம்பு கடித்துவிட்டது. உடனடியாக அவனை மாவட்ட ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவன் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் சமீபத்தில் சர்வஜன மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறையிலேயே பாம்பு கடித்து 5-ம் வகுப்பு மாணவி இறந்தார். இது மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து அனைத்து பள்ளிகளிலும் மிகப்பெரிய அளவில் தூய்மைப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் சுல்தான் பதேரி பகுதியில் உள்ள பீனாச்சி அரசு பள்ளி மைதானத்தில் 2-ம் வகுப்பு மாணவன் முகமது ரைஹானை ஒரு பாம்பு கடித்துவிட்டது. உடனடியாக அவனை மாவட்ட ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவன் அனுமதிக்கப்பட்டுள்ளான்.