மத்திய பட்ஜெட் குறித்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை

மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் 2020-21-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார். இதற்காக நேற்று பல்வேறு தொழிற்சங்கங்கள், தொழிலாளர் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

Update: 2019-12-19 23:19 GMT
புதுடெல்லி, 

தரமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம், திறன்மேம்பாடு அளிக்க நடவடிக்கை, ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்குவது மற்றும் வேலை நாட்களை அதிகரிப்பது உள்பட தொழிலாளர்கள் பிரச்சினைகளை நிதி மந்திரியிடம் தொழிற்சங்க பிரதிநிதிகள் எடுத்துரைத்தனர்.

மேலும் செய்திகள்