குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக கொல்கத்தாவில் பாஜக பேரணி

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பாஜக கொல்கத்தாவில் பிரமாண்ட பேரணி நடத்தியது.

Update: 2019-12-23 11:10 GMT
கொல்கத்தா,

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கொல்கத்தாவில் பிரமாண்ட பேரணி நடத்தினார். 

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும், தேசிய குடிமக்கள் பதிவேடு முறையை கண்டித்தும் கடந்த வாரம் மேற்குவங்க மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. குடியுரிமை திருத்த சட்டத்தை தங்களது மாநிலத்தில் அமல்படுத்தப் போவதில்லை என்று முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பாஜக தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் கொல்கத்தாவில் பேரணி நடத்தப்பட்டது. மேற்குவங்க மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ், பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா உள்பட பலர் பேரணியில் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்