அசாம் பயணத்தை தவிர்த்தார் பிரதமர் மோடி

'கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுகள்' அசாமின் கவுகாத்தி நகரில் 10-ம்தேதி தொடங்கவுள்ளன. இதனை தொடங்கி வைக்குமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

Update: 2020-01-09 01:17 GMT
புதுடெல்லி,

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக அசாமில் தீவிர போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில்,   கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுகள்' அசாமின் கவுகாத்தி நகரில் 10-ம்தேதி தொடங்கவுள்ளன. இதனை தொடங்கி வைக்குமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 

 ஆனால், பிரதமர் மோடி அசாம் வருகை தந்தால் மிகப்பெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று போராட்டக்காரர்கள் கூறியிருந்தனர். இந்த நிலையில்,  கேலா விளையாட்டு  விழாவில் பங்கேற்பதை மோடி தவிர்த்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  ' இதுதொடர்பாக மத்திய விளையாட்டு அமைச்சகம் மற்றும் அசாம் அரசுக்கு தகவல் அளித்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. 

இதேபோன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும், விளையாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவரும் அசாம் பயணத்தை தவிர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மேலும் செய்திகள்