பாகிஸ்தான் ராணுவம் எல்லை தாண்டி துப்பாக்கி சூடு: இந்திய ராணுவம் பதிலடி

பாகிஸ்தான் ராணுவம் எல்லை தாண்டி நடத்திய துப்பாக்கி சூட்டிற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடித்தது.

Update: 2020-03-27 22:30 GMT
ஜம்மு, 

காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே வியாழக்கிழமை இரவு 11.45 மணி அளவில் பாகிஸ்தான் ராணுவம் எல்லை தாண்டி அத்துமீறி துப்பாக்கியால் சுடுவதும், சிறு குண்டுகளை வீசுவதுமாக இருந்தது. நேற்று காலை வரை இந்த தாக்குதல் தொடர்ந்தது.

இந்திய ராணுவமும் அவ்வப்போது தக்க பதிலடி கொடுத்தது. இந்த தாக்குதலில் இந்தியா தரப்பில் எந்த உயிரிழப்பும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஜனவரி 1-ந் தேதியில் இருந்து பிப்ரவரி 23-ந்தேதி வரை பாகிஸ்தான் ராணுவம் 646 முறை எல்லை தாண்டி தாக்குதல் நடத்தியுள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்