'மனதின் குரல்' நிகழ்ச்சியில் இன்று காலை 11 மணிக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி
'மனதின் குரல்' நிகழ்ச்சியில் இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
புதுடெல்லி,
கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற பிரதமர் நரேந்திர மோடி, மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
இந்த நிலையில் இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சி, இன்று காலை 11 மணிக்கு தொடங்க இருக்கிறது . கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், இது தொடர்பாகவும் சமூக விலகலின் முக்கியத்துவம் பற்றியும் பிரதமர் மோடி பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.