சீனாவுடனான மோதல் விவகாரம்: மக்களின் கவலைகளை தீர்க்க வேண்டும் - காங்கிரஸ் வலியுறுத்தல்

சீனாவுடனான மோதல் விவகாரம் தொடர்பாக, மக்களின் கவலைகளை தீர்க்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.

Update: 2020-05-27 18:59 GMT
புதுடெல்லி, 

காங்கிரஸ் மூத்த செய்தித்தொடர்பாளர் ஆனந்த் சர்மா நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சீனாவுடனான மோதல் குறித்து தேசிய, சர்வதேச ஊடகங்களில் வெளியாகும் முரண்பாடான தகவல்கள் மக்களுக்கு பெரிதும் கவலை அளிக்கின்றன. எனவே, மக்களின் கவலையை போக்கி, அவர்களின் நம்பிக்கையை பெறுமாறு மத்திய அரசை காங்கிரஸ் வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்