கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் தீவிர கவனத்துடன் செயல்பட வேண்டும் - மாயாவதி வலியுறுத்தல்

கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் தீவிர கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று மாயாவதி வலியுறுத்தி உள்ளார்.

Update: 2020-06-01 21:58 GMT
லக்னோ, 

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்து வரும் நிலையில், 5-வது கட்ட ஊரடங்கு, தளர்வுகளுடன் அமலுக்கு வந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால், மத்திய, மாநில அரசுகள் தீவிர கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்