கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் தீவிர கவனத்துடன் செயல்பட வேண்டும் - மாயாவதி வலியுறுத்தல்
கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் தீவிர கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று மாயாவதி வலியுறுத்தி உள்ளார்.
லக்னோ,
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-
கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்து வரும் நிலையில், 5-வது கட்ட ஊரடங்கு, தளர்வுகளுடன் அமலுக்கு வந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால், மத்திய, மாநில அரசுகள் தீவிர கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.