கொரோனாவால் உயிரிழந்த இசையமைப்பாளர் வாஜித்கான் தாய்க்கும் தொற்று

கொரோனாவால் உயிரிழந்த இசையமைப்பாளர் வாஜித்கான் தாய்க்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-06-02 22:15 GMT
மும்பை, 

இந்தி திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் வாஜித்கான். 42 வயதான இவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். இந்தநிலையில், வாஜித்கானின் தாய் ரசினா கானுக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர் செம்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இங்கு தான் மறைந்த வாஜித்கானும் சிகிச்சை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்