காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு; இந்திய ராணுவ வீரர் உயிரிழப்பு

காஷ்மீரில் போர்நிறுத்த ஒப்பந்தத்தினை மீறி பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.

Update: 2020-06-14 07:45 GMT
ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் பூஞ்ச் பிரிவில் பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்தத்தினை மீறி நேற்றிரவு இந்திய நிலைகள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது.  இதில், இந்திய ராணுவ வீரர் ஒருவர் படுகாயமுற்றார்.  இதனை தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

எனினும், அவர் இன்று மரணம் அடைந்து விட்டார் என ராணுவ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.  இந்நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் ராம்பூர் பிரிவில் பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்தத்தினை மீறி மீண்டும் இன்று காலை தாக்குதலில்
ஈடுபட்டது.

மேலும் செய்திகள்