டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 1,379 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 1,379 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2020-07-06 14:49 GMT
புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளது. டெல்லியில் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. இதனால் தற்போது அங்கு கொரோனா பரவல் கட்டுக்குள் வந்திருப்பதாக டெல்லி அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் டெல்லி சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 1,379 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் டெல்லியில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,00,823 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் 48 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா பலி எண்ணிக்கை 3,115 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 72,088 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். டெல்லியில் தற்போது 25,620 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்