தானே மாவட்டத்தில் முழு ஊரடங்கு 19-ந் தேதி வரை நீட்டிப்பு

தானே மாவட்டத்தில் தீவிர நோய் பரவல் காரணமாக முழு ஊரடங்கு வருகிற 19-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-07-12 10:35 GMT
தானே,

கொரோனா வைரசின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் மராட்டியத்தில் தலைநகர் மும்பைக்கு அடுத்தபடியாக தானே மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அதிகமானோர் இந்த வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53 ஆயிரத்து 152 ஆக உள்ளது மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,560 ஆக உள்ளது.

இந்நிலையில் மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டு இருந்த முழுஊரடங்கு இன்றுடன் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து தீவிர வைரஸ் பரவல் காரணமாக மாவட்டத்தில் முழுஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு அதாவது வருகிற 19-ந் தேதி வரை நீட்டித்து மாவட்ட கலெக்டர் ராஜேஷ் நர்வேகர் உத்தரவிட்டுள்ளார். 

மேலும் தானே மாவட்டத்தின் உல்லாஸ்நகர் மாநகராட்சி பகுதியில் முழு ஊரடங்கை வருகிற 22-ந் தேதி வரை நீட்டித்து மாநகராட்சி கமிஷனர் ராஜா தயாநிதி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

தானே நகரில் ஏற்கனவே முழுஊரடங்கை வருகிற 19-ந் தேதி வரை நீட்டித்து மாநகராட்சி கமிஷனர் கணேஷ் தேஷ்முக் உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்