எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல்

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

Update: 2020-07-19 14:31 GMT
ஸ்ரீநகர்,

எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் ராணுவம் வாடிக்கையாக கொண்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் இத்தகைய அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.  

இந்த நிலையில், ராஜோரி மாவட்டத்தில் உள்ள சுந்தர்பேனி செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.  இந்த தாக்குதலுக்கு  இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

முன்னதாக பாகிஸ்தான் ராணுவம் நேற்று அத்துமீறி நடத்திய தாக்குதலில், இந்திய தரப்பில் பொதுமக்கள் 3 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, பாகிஸ்தான் தூதரக பொறுப்பு அதிகாரியை நேரில் அழைத்து இந்தியா தனது கண்டனத்தை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்