புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,513 ஆக உயர்வு
புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,513 ஆக உயர்ந்து உள்ளது.
புதுச்சேரி,
புதுச்சேரி அரசின் சுகாதார மற்றும் குடும்ப நல இயக்ககத்தின் சார்பில் இயக்குனர் மோகன் குமார் வெளியிட்டு உள்ள செய்தியில், புதுச்சேரியில் இதுவரை 33,658 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 30,648 பேருக்கு பாதிப்பு இல்லை என உறுதியானது.
இன்று வெளியான முடிவுகளின்படி, பரிசோதனை செய்யப்பட்ட 647 பேரில் 97 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. 312 பேரின் பரிசோதனை முடிவுகள் காத்திருப்பில் உள்ளன.
இதனால் புதுச்சேரியில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,513 ஆக உயர்ந்து உள்ளது. தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. இதேபோன்று 1,483 பேர் குணமடைந்து சென்றுள்ளனர். 996 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவித்து உள்ளார்.