எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டது. பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது.
ஸ்ரீநகர்,
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் ராணுவம் வாடிக்கையாகக் கொண்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் ராணுவம் வாடிக்கையாகக் கொண்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய தாக்குதலை, இந்தியா பலமுறை, அந்நாட்டு தூதரக அதிகாரிகளுக்கு சம்மன் கொடுத்து கண்டித்த போதிலும் எந்த பலனும் கிடைப்பதில்லை.
இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பாலகோட் செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. மோர்டார்கள் மூலம் சிறிய ரக ஆயுதங்களால் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.
இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பாலகோட் செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. மோர்டார்கள் மூலம் சிறிய ரக ஆயுதங்களால் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.
பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. பாகிஸ்தான் தொடர்ந்து 6-வது நாளாக எல்லையில் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது.