சிசிடிவி கேமராக்களை உலக அளவில் அதிகம் நகரங்களில் ஐதராபாத்தும் ஒன்று

சிசிடிவி கேமராக்களை உலக அளவில் அதிகம் பயன்படுத்தும் முதல் 20 நகரங்களில் 16- வது இடத்தில் ஐதராபாத் நகரம் இருப்பதாக இங்கிலாந்து நிறுவன ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-08-03 08:33 GMT
ஐதராபாத்

இங்கிலாந்தின்  கம்பாரிடெக் எனும் நிறுவனம்  இதுகுறித்து ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையை தெலுங்கானா மாநில காவல்துறை தலைவர் மகேந்தர் ரெட்டி, தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் உலக அளவில் 16-வது இடத்திலும், இந்திய அளவில் முதலிடத்திலும் ஐதராபாத் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐதராபாத் முழுவதும் 3 லட்சம் சிசிடிவி கேமராக்கள் கண்காணிப்புக்கு பொருத்தப்பட்டு இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. அந்த பட்டியலில் சீனாவின் தையுவான் நகரம் நான்கு லட்சத்து 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட (4,65,255) சிசிடிவி கேமராக்களுடன் முதலிடத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்