கர்நாடக மாநிலத்தில் மேலும் 5,619 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கர்நாடக மாநிலத்தில் இன்று மேலும் 5,619 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-08-05 14:42 GMT
பெங்களூரு,

கர்நாடக மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கர்நாடகாவில் இன்று மேலும் 5,619 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,51,449 ஆக அதிகரித்துள்ளது.

கர்நாடகாவில் இன்று 100 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,804 ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் 5,407 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 74,679 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் தற்போது 73,958 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், அதில் 633 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாகவும் மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்