காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் வீசிய 4 வெடிக்காத குண்டுகள் அழிப்பு

காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் வீசிய 4 வெடிக்காத குண்டுகள் அழிக்கப்பட்டது.

Update: 2020-09-19 01:11 GMT
ஜம்மு, 

காஷ்மீரில் எல்லை கோட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், பூஞ்ச் மாவட்டத்தின் பாலகோட் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தால் வீசப்பட்ட 4 வெடிகுண்டுகள் வெடிக்காமல் கிடப்பது தெரியவந்தது.

இதையடுத்து, ராணுவத்தின் வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு சென்று அந்த குண்டுகளை கைப்பற்றினர். பின்னர் தனி இடத்திற்கு கொண்டு சென்று அந்த வெடிகுண்டுகளை அழித்தனர்.

மேலும் செய்திகள்