எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்
பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.
ஸ்ரீநகர்,
போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறி எல்லையில் தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் வாடிக்கையாகக் கொண்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுக்கத் தயங்குவதில்லை. எனினும் பாகிஸ்தான் திருந்தியபாடில்லை.
இந்த நிலையில், பூஞ்ச் மாவட்டத்தின் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. பாகிஸதானுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.