பஞ்சாப் மாநிலத்தில் இன்று 802 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

பஞ்சாப் மாநிலத்தில் இன்று 802 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-11-18 15:15 GMT
சண்டிகர்,

பஞ்சாப் மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 802 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,43,395 ஆக அதிகரித்துள்ளது.

பஞ்சாபில் இதுவரை 1,32,917 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 4,541 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ள நிலையில், தற்போது மருத்துவமனைகளில் 5,937 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக, ஆந்திர மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்