காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இந்திய ராணுவ வீரர் தற்கொலை
காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
பூஞ்ச்,
ஜம்மு மற்றும் காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இந்திய ராணுவத்தின் ராஷ்டீரிய ரைபிள்ஸ் படை பிரிவை சேர்ந்த வீரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அவர், சலோத்ரி கிராமத்தில் நம்பல் என்ற பகுதியில் பணியமர்த்தப்பட்டு இருந்துள்ளார். அவரது முடிவுக்கான காரணம் தெரியவரவில்லை. போலீசார் பிரிவு 174ன் கீழ் இதுபற்றி விசாரணையை தொடங்கியுள்ளனர்.