கர்நாடகாவில் இன்று 1,505 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கர்நாடக மாநிலத்தில் இன்று புதிதாக 1,505 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-11-26 17:30 GMT
பெங்களூரு,

கர்நாடக மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இன்று புதிதாக 1,505 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,79,560 ஆக அதிகரித்துள்ளது.

கர்நாடகாவில் இன்று 12 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 11,726 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 8,42,499 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தற்போது மருத்துவமனைகளில் 25,316 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக, கர்நாடக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்